தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம்: எப்போது போட்டித் தேர்வு (TET) பாடத்திட்டம் ( syllabus) அறிவிப்பு வெளியாகும் ?

 

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பணி நியமனம்: எப்போது போட்டித் தேர்வு  பாடத்திட்டம் (syllabus) அறிவிப்பு வெளியாகும் ?



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு இவ்வாண்டு மே மாதத்திற்குள் (2023-MAY) வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர் (BT) பணியிடங்கள் நியமனத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் (TET) தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
 
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்      தாள் -2 (TET-2)  ல் 15,297 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தாள் -1 (TET-1)  ல், 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங்கேற்றனர். அதில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET-ல்) தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை (எண் 149) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு இவ்வாண்டு மே மாதத்திற்குள் (2023-MAY)  வெளியிடப்படும். அதன் பிறகு தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
 
ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்விற்குரிய பாடத்திட்டங்கள், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும். இடைநிலை (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர் (BT) பணியிடங்களில் சுமார் 10,000 காலிப்பணியிடங்கள்  உள்ளன.
 
இது தவிர, வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) , கல்லூரி உதவிப் பேராசிரியர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (PG) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்புகளும் இவ்வாண்டு மே மாதம் (2023-MAY)  வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Post a Comment (0)