- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .01 / 2023 , நாள் 05.06.2023 ன்படி 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான கல்வியாண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் (BLOCK EDUCATION OFFICER - BEO) காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு வரும் 2023 செப்டம்பர் 10 (10.09.2023) அன்று நடத்தப்பட உள்ளது.
- இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் . விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://www.trb.tn.gov.in ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்டு 25 (25.08.2023) முதல் விண்ணப்பித்துள்ள அனைத்து தேர்வர்களும் அவர்களது பயனர் ஐடி (User id) மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீடு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது . எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) அறிவுறுத்தப்படுகிறார்கள் .
தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்