திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

 

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

திருநெல்வேலி நகரமானது, 1870ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பனியினரால் உருவாக்கப்பட்டது.  ந்நகரம் பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது இந்நகரம். ஒரு காலத்தில் 'திருநெல்வேலிச் சீமை' எனவும் அழைக்கப்பட்டது.‌

திருநெல்வேலி

தனித் தமிழ் போல் கம்பீரத்தோடு காட்சி தரும்  ம்மாவட்டம் வரலாற்று  சிறப்புகளை மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையிலும் பல்வேறு இடங்களை  தன்னகத்தே வைத்துள்ளது.


முன்
பு, 1064 ஆம் ஆண்டில் சோழ மன்னன்  கங்கைகொண்ட சோழன் அரியணை ஏறினான். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சோழ மன்னர்  ஆட்சி காலம் தொடர்ந்த்து. இதற்கு சான்றாக திருநெல்வேலிக்கு அருகே கங்கைகொண்டான் என் ஊர் இன்றும் இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்பு ...

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்பு , திருநெல்வேலி மாவட்டம் 1986 அக்டோபர் 20 அன்று தூத்துக்குடி வ.ஊ.சிதம்பரனார் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  ஊர் முழுவதும் எங்குப் பார்த்தாலும் நெல் விளையும் பூமி உள்ளதை  உணர்த்தும் வகையில் ‘நெல் வேலிஎனப் பெயரிடப்பட்டுள்ளது.


நெல்லையப்பர்-காந்திமதி கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், பத்திரகாளி அம்மன் கோயில் என இங்கு இறையருளை வீசும்  கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தனக்கென தனியொரு புராதானக் கதைகளையும், வரலாற்றையும் சுமந்து நிற்கின்றன. நம் நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற மாபெரும் வீரர்களை பெற்றெடுத்த பெருமை திருநெல்வேலிக்கு உள்ளது.



இது மட்டுமா . . .  இந்த திருநெல்வேலியில் தான் புகழ்மிக்க பல்கலைக்கழகமான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.


திருநெல்வேலி தனிச்சிறப்பாக திகழும் அல்வா

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் என்றும் மக்களால் போற்றப்படுகிறது. மங்கையர்க்கரசி மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகரம் என்று முன்னோர்களால் போற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயர் பெற்று அழைக்கப்பட்டது. மூங்கில் காடு இதன் அர்த்தமாகும். மூங்கில் இங்கு அதிகமாக விளையும்.



அல்வாவைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்…    இந்த திருநெல்வேலி நகரத்தில் அல்வாவுக்கு என தனிக்கடை ஒன்று 1882ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது. கடையைத் திறந்தவர் ஒரு சிங். பெயர் ஜெகன் சிங். சுதந்திரத்திற்கு முன்  கிழக்கிந்திய நிறுவனத்தினர் பல்வேறு நகரங்களில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வந்தனர். அப்போது தெருக்களில் அல்வாக்கள் விற்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக  முதல் முறையாக மாவட்டத்தில் முதன் முதலில் இருட்டுக்கடை அல்வா கடை தோன்றியுள்ளது.

தாமிரபரணி என்ற ஜீவநதி


உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ள
உதவும் வகையில்  மாவட்டத்தைச் சுற்றிப் பல அருவிகள் உள்ள.  குற்றாலம், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி என அழகியலை பலவற்றையும்  தனக்குள்  கொண்டுள்ளது இந்நகரம் . அருவிகளே இத்தனை இருக்கும் போது இங்கு அணைகளுக்கு பஞ்சமா என்ன ? .





ஆமாங்க   கடனாநதி அணை, மணிமுத்தாறு அணை, ராமநதி அணை, அடவி நயினார் அணை , குண்டாறு அணை எனப் பல அணைகளை உள்ளடக்கியுள்ளது இந்நகரம் . அதேபோல், திருநெல்வேலி வளமாக செழிப்பாக உள்ளது என்றால் அது இங்கு ஓடும் தாமிரபரணி ஆறு தான் காரணம். இந்த  தாமிரபரணி ஆறு தண்பொருநை என்று முன்னோர்களால் போற்றப்பட்டுள்ளது.

இங்கு பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, கரையாது என்று பல கிளைகள் ஆறுகளாக பிரிந்து மிகப்பெரிய மாவட்டமாக தெரிகிறது. திருநெல்வேலி மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை  பெற்று வருகிறது . உழவுத் தொழிலிலும்  முதன்மையான  மாவட்டமாக உள்ளது இந்த திருநெல்வேலி.  தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெற்று வருகின்றன. இங்கு குத்து பாசனமும் , கிணற்றுப்பாசனம், ஏரிப்பாசனமும்  கூட பயன்பாட்டில் உள்ளன.



விளையும் பொருள்கள் :                                                                                                                                                                                        


     

இங்கு நெல், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி,பருத்தி, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிடப்பட்டு வருகின்றன. 



இங்கு விளையும் வாழை  தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, அந்திரம், தெலுங்கானா போன்றவற்றை மாநிலங்களுக்கும்  ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 



நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் இம்மாவட்டம் தான் முதலிடம் வகிக்கிறது.  கடலோர மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.




இங்கு பலவகையான மீன்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 


நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளது. வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என அழைத்தனர். இங்கு
முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் இலக்கியங்களில் இம்முத்துக்குளித்தல் பற்றி  சங்க இலக்கியங்கள் பல கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது என்பது குறிப்பிட்த்தக்கது.


சங்க காலங்களில் இங்கு கிடைக்கும் கொற்கை  முத்துக்களை வாங்க கிரேக்கம், உரோமாபுரி  போன்ற வெளிநாட்டவர்கள் வருவார்கள்.  தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் திருநெல்வேலி கிழக்கு கரையில் பாளையங்கோட்டை அமைந்துள்ளது.  இவ்விரண்டு நகரங்களும்  இரட்டை நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பாளையங்கோட்டையில் அதிகமாக கல்வி நிலையங்கள் இருப்பதால் இந்நகரம் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் எனவும் அழைக்கப்படுகிறது.

                                                                    ஜி.யு.போப்


                                                                    கால்டுவெல்

 


                                                            வீரமாமுனிவர்

ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் பலரை தமிழின்பால் ஈர்த்த பெருமை இந்த திருநெல்வேலி மாவட்டத்தையே சேரும்.   


திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலியின் புகழைப் போற்றி வணங்குவோம் என்றென்றும் நாம் . . . 

Post a Comment (0)