புவி ஆய்வில் அதிர்ச்சி தகவல் - நிலத்தடி நீரின் அதிக பயன்பாட்டால் வந்த விளைவு

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் புவியின் அச்சு 31.50 அங்குலம் சாய்ந்தது என புவி பற்றிய இயற்பியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்



 தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 



 அவர்கள் ஆய்வின் முடிவை ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: 

     நிலத்தடி நீர் குறைவு காரணமாக, பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. ஆராய்ச்சி மேற்கொண்ட காலத்தில் பூமியிலிருந்து 2,150 ஜிகா டன்கள் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. பூமியிலிருந்து நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டதால், கடல் மட்டமும் 0.24 அங்குலம் உயர்ந்து, பூமியின் நிறையில் மாற்றம் ஏற்பட்டு அதன் சுழற்சி அச்சு ஆண்டுக்கு 4.36 செ.மீ சாய்வதற்கு வழிவகை செய்கிறது. தற்போது அது 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது. 


 மேலும், நிலத்தடி நீர், கடலுக்கு மீண்டும் செல்வது, துருவ இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பூமியின் அச்சில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால், வானிலையில் உடனடி பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், நீண்டகால பாதிப்பு ஏற்படலாம். 



பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், நீடித்த நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். 


ஒவ்வொருவரும் நீர் மேலாண்மையை பற்றி அறிந்து நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், நீரைச் சேமிக்கும் வழி முறைகளை அறிந்து நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


 

மழை நீரை சேமிப்போம் ! 

நிலத்தடி நீரை உயர்த்துவோம் ! 

நம் வருங்காலத்தை வளமாக்குவோம் !




Post a Comment (0)