விநாயகர் சதுர்த்தி வரலாறு பற்றிய தகவல்களை அறிய வேண்டுமா ? இதோ ...

விநாயகர் சதுர்த்தி தொடங்கிய வரலாறு :



பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கணேஷ் சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அவரவர் வீட்டில் இதற்காக சிறப்பு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்த பண்டங்களான எள் கொழுக்கட்டை, கடலை, சமைத்து நைவேத்தியமாக வைத்து கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்கும். மேலும், அனைத்து விதமான பழவகைகள் மற்றும் மக்காச்சோளம், கரும்பு வைத்தும் வழிபடுவர். 

மக்கள் விநாயருக்கு அருகம்புல், எருக்கம்பூ மற்றும் பல்விதமான பூவகைகளால் அலங்காரம் செய்தும் வழிபடுவார்கள்.

அவரவர் வசிக்கும் தெருவில்  குழுவாக சேர்ந்தும் கொண்டாடுவார்கள். இது மட்டுமல்லாமல் சிறியது முதல் விண்ணை முட்டும் அளவுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

ஆனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் தொடங்கியது என்று கூறப்படுகிறது.

மராட்டிய மன்னரான சிவாஜி மகாராஜாவால் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் இதைக் கொண்டாட வேண்டும் என்றும் இந்துக்களுடைய பாரம்பரியத்தை வளர்த்து, மக்களிடையே ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து கொண்டாட வேண்டும் என்று மன்னர் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி, காலம் செல்ல செல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது உலகம் முழுவதிலும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட நேபாளம், மொரிஷியஸ், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment (0)